மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பல் கைது!
மட்டக்களப்பில் பாரிய மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்றை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது மணல் ஏற்றப்பட்ட இழுவைப்பெட்டிகளுடன் 12 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சாரதிகள் 12 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கும்பல் மணல் ஏற்றிச்செல்வதற்கு மாத்திரம் அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு களுமுந்தன்வெளி ஆற்றினுல் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்துகொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed